மோடியின் உரையில் உள்ள தவறான தகவலகளை நீக்கும் வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில், “ராகுல் காந்தியின் மக்களவை உரையில், தவறான தகவல்கள் இருந்ததாகக் கூறி, அவரது பேச்சில் பல பகுதிகளை நீக்கியது போல, பிரதமர் மோடியின் உரையில் உள்ள தவறான பல தகவல்களையும் நீக்க வேண்டும். நாடாளுமன்ற விதி எல்லோருக்கும் ஒன்றுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.