மதுபான முறைகேடு வழக்கில் சிறைக்கு சென்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. முன்னதாக தனக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.