கோவை அருகேயுள்ள அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மா (53). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் பத்மா, கடந்த 18ம் தேதி பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வழுக்குப்பாறை அருகே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், மகளுக்குத் திருமணம் தாமதமாகி வந்தது, மகனின் எதிர்காலம் குறித்த கவலை, எதிர்பாராதவிதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பணச் செலவுகள் போன்றவற்றால் மனஅழுத்தத்தில் இருந்த பத்மா தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது