தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவதூறு பரப்பும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையில், “இந்த புகாரை தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் விசாரிக்க வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து, யூடியூப் சேனல்களில் விஜய்க்கு எதிராக தவறான கருத்துகள் பரவி வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.