தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வரும் தைப்பூசத்தன்று (பிப்.,11ஆம் தேதி) வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 10.00 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. சில மங்களகரமான நாட்களில் பொதுமக்கள் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ளும் வகையில் பதிவு அலுவலகங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினம் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.