கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ராமச்சந்திரன் பேட்டை விருத்தாம்பிகை நகரை சேர்ந்த பழமலை என்பவர் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பழமலையை கைது செய்தனர்.