பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை வார சந்தையில் நடைபெற்றது. இந்த ஆட்டு சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். அதிக விலைக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.