கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மாருதி நகரை சேர்ந்தவர் குமார் கொத்தனார் இவரது மனைவி ராதா இவர் வீட்டை பூட்டிவிட்டு அதே ஊரில் உள்ள தனது மாமனார் இறந்து துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, பீரோவில் வைத்திருந்த 11 1/2 பவுன் நகைகள் மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. வீடு பூட்டியே இருந்த நிலையில் சாவி போட்டு திறந்து யாரோ நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
திருடு போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 6 ½லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.