கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையினால் பல்வேறு இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.