கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து என்கின்ற அய்யாரெட்டு என்பவரும் தனது மருமகள் மீனா இளவரசன் இருவரும் இருசக்கர வாகனத்தில் பாசார் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலை விபத்து ஏற்பட்டு விபத்தில் மீனா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்,
செல்லமுத்து பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விக்கிரவாண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் துரதிர்ஷ்டவசமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பாசார் கிராமத்தையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மீனா என்பவர் கழுதூர் சமத்துபுரம் முத்துக்கருப்பன் மகள் ஆவார். விபத்து குறித்து வேப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.