5. 6. 24இன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொரக்கவாடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. சி. சக்திவேல் பொறியாளர் செந்தில் மேற்பார்வையாளர்கள் ராஜா மற்றும் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர், மற்றும் ஊராட்சி செயலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டுவைத்தனர்.