தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் ஆதிதிராவிடர் நலன் - விருத்தாச்சலம் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமுளை ஊராட்சியின் புதுக்குளம் பகுதியில் உள்ள அருந்ததியர் பொதுமக்களுக்கு 1999 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் அருந்ததியர் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஐந்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தொகுப்பு வீடும் உள்ளது. அப்படி இருக்கும் சூழலில் பட்டா 1999 ம் ஆண்டு வழங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கணக்கு திருத்தம் செய்யாமலும் சரியான அளவீடு செய்யாமலும் முறையான பட்டா வழங்காமலும் அரசு அதிகாரிகள் இருந்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் அவர்களுடைய கோரிக்கை நிறைவேறாமல் இருந்து வருகிறது. எனவே இது தொடர்பாக ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் விருத்தாசலம், அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உடன் மாநில துணைச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன், மங்களூர் ஒன்றிய செயலாளர் இராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.