புதுப்பேட்டை அருகே உள்ள மணம் தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாண்டியன், நடராஜனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த நடராஜன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.