சிறுவத்தூர்: கூரை வீடு எரிந்து சாம்பல்

85பார்த்தது
சிறுவத்தூர்: கூரை வீடு எரிந்து சாம்பல்
பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் அய்யப்பன் தொழிலாளி நேற்று மாலை இவரது கூரை வீட்டின் ஒரு பகுதி திடீரென தீப்பற்றி எரிந்து புகைமூட்டம் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் முடியாததால் பண்ருட்டி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தண்ணீரை பிச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீட்டிலிருந்த உபயோகப் பொருட்கள், மின்சாதன பொருட்கள், உடைமைகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் புதுப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி