நெல்லிக்குப்பம்: சாலை விரிவாக்கம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

56பார்த்தது
நெல்லிக்குப்பம்: சாலை விரிவாக்கம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கடலூர் முதல் சித்தூர் வரை செல்லக்கூடிய சாலை கடந்த அதிமுக ஆட்சியில் கடலூர் சாவடி முதல் மடப்பட்டு வரை சுமார் 37 கிலோமீட்டருக்கு சாலை விரிவாக்க பணிகளுக்காக டென்டர் விடப்பட்டு கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் ஓரளவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு முடிவிற்கு வந்தது. 

இந்நிலையில் கடலூர் முதல் பண்ருட்டி வரை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை நெல்லிக்குப்பத்தை அடுத்த வாழப்பட்டு தனியார் பள்ளி அருகே சாலை வளைந்து செல்வதால் அங்கு அடிக்கடி சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இன்று (டிசம்பர் 26) காலை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி வளைந்து செல்லும் சாலையை நேராக சாலை அமைத்தால் வாகன விபத்து ஏற்படாது மேற்படி ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மேற்படி ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஷபானா அஞ்சும், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சத்யமூர்த்தி, பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ஆனந், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன், பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி