கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.