கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வானமாதேவி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வானமாதேவி காலனி முருகன்கோவில் தெருவை சேர்ந்த வேலு மனைவி பழனியம்மாள் தனது வீட்டில் விற்பனை செய்ய புதுச்சேரி சாராயம் 5 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பழனியம்மாளை கைது செய்தனர்.