வெங்கடாம்பேட்டை: வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

80பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். உடன் அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்தனர்‌.

தொடர்புடைய செய்தி