கடலூர் மாவட்டம் நெய்வேலி கிராமத்தில் உள்ள வேலுடையான்பட்டு கிராமத்தில் உள்ள தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு (பிப்ரவரி 07) இரவு வெள்ளி ரத உற்சவத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.