கடலூர் கிழக்கு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.