முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ இன்று (ஜூன் 03) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.