நெய்வேலி: வாலிபர் மீது வழக்கு

74பார்த்தது
நெய்வேலி: வாலிபர் மீது வழக்கு
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோ. சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வகுமார் இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் 2 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த நாளில் இருந்து சிறுமி செல்வகுமார் வீட்டிற்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் தங்களது மகளை அவரது மாமனார் வீட்டுக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து சிறுமி சமூகநலத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குறிஞ்சிப்பாடி ஊரக நல அலுவலர் லதா சிறுமியை திருமணம் செய்தது குறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமியை திருமணம் செய்த செல்வகுமார் மற்றும் திருமண ஏற்பாடுகளை செய்த இருவருடைய பெற்றோர்கள் என 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி