கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தம்பிப்பேட்டை, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள சாலையோரம் மின் கம்பத்தில் அதிக அளவில் புதர் செடிகள் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.