கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் ஊராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் துறையால் புதிதாக கட்டப்பட்ட தங்களிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு வகுப்பறை கொண்ட கட்டிடத்தை இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.