கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு பகாசுரனுக்கு சோறு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.