கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி அய்யனார் கோவிலில் இன்று சக்தி பூஜை செய்து சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.