கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பழந்தெருவில் எழுந்தருளியுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் மார்கழி மாதம் 16 ஆம் தேதியை முன்னிட்டு இன்று சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.