கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மேம்பாலம் மேலே தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.