கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கல்லுக்குழி கிராமத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் நேற்று இரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் சார்பில் பஜனை பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.