கடலூர்: மது பாட்டில்கள் விற்றவர் கைது

70பார்த்தது
கடலூர்: மது பாட்டில்கள் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி காவல் துறையினர் நேற்று குள்ளஞ்சாவடி இருசப்பன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. பின்னர் மது பாட்டில் விற்ற குள்ளஞ்சாவடி இருசப்பன் நகரை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் மீது குள்ளஞ்சாவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி