கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை 3-ஆம் தேதி ஆடி மாத ஜோதி தரிசனம் இரவு 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை நடைபெற உள்ளது. அதற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.