ஸ்ரீ முஷ்ணத்தில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்குதல்

2969பார்த்தது
ஸ்ரீ முஷ்ணத்தில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்குதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட கழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளர, சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, நலதிட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முனைவர் கானூர் கோ. பாலசுந்தரம், கழக அம்மா பேரவை துணை செயலாளர் கே. எஸ். கே. பாலமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி