கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின் பேரில் கடலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் M. S. ரூபன்குமார் மேற்பார்வையில், கடலூர் முதுநகர் வண்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி உதவி ஆய்வாளர் K. கணபதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டனர். தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு குளிர்பானம் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.