திட்டக்குடி: மணல் திருடிய கும்பல் தப்பி ஓட்டம்

78பார்த்தது
திட்டக்குடி: மணல் திருடிய கும்பல் தப்பி ஓட்டம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் நேற்று அதிகாலையில் ஒரு கும்பல் மணல் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் காவல் துறையினரை கண்டதும் மணல் திருடிய கும்பல் பொக்லைன் எந்திரத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பொக்லைன் எந்திரத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து மேலும் தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி