கடலூர் மாவட்டம் செம்மண்டலம் சிக்னல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் மார்கழி மாத தனூர் பூஜை இன்று (ஜனவரி 11) அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர்.