கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பை, கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.