பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் தேவநாதன் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் வாகன போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது வயதான மூதாட்டி ஒருவர் திடீரென சாலையைக் கடக்க முற்பட்டபோது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தேவநாதன் சமயோசிதமாக பாட்டியின் கையைப் பிடித்து நிறுத்தி, பின்னர் பத்திரமாக சாலையைக் கடக்க உதவிசெய்தார். இந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜுவால் IPS பாராட்டி வெகுமதி வழங்கினார். பின்னர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS போக்குவரத்து உதவி ஆய்வாளரைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.