கடலூர் அடுத்த முத்துசாமி நகர் முகப்பு சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்