கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.