குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரசக்தி அய்யனார் கோயிலில் 42 ஆம் ஆண்டு லட்சதீப திருவிழாவை முன்னிட்டு இன்று காவடி மற்றும் பால்குடம் வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.