கடலூர்: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

57பார்த்தது
கடலூர்: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரை சேர்ந்த பெரிய சாமி தச்சுத்தொழிலாளி நேற்று இவர் கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வேலை செய்ய சென்றுள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நடந்து சென்ற போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.cr இது குறித்து தூக்கணாம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி