கடலூர்: சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

57பார்த்தது
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மழை இல்லாமல் இருந்த நிலையில் இன்று காலை 9. 30 மணி அளவில் கடலூர் அடுத்த கோண்டூர், சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி