கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்ததால் வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து 101.1 டிகிரி வெயில் பதிவானது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.