கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள மணிகூண்டில் உள்ள கடிகாரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது கடிகாரம் ஓடாமல் இருப்பதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.