கடலூர்: திருவிழாவில் காவல் உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு

62பார்த்தது
கடலூர் புதுநகர் காவல் சரகம் உண்ணாமலை செட்டி சாவடி கோவில் திருவிழா பாட்டு கச்சேரி நிகழ்வில்போது இளைஞர்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, ஹெராயின், குட்கா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது என கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

மேலும் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்றால் ரகசியமாக தகவல்கள் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாணவர்கள் நல்ல முறையில் படித்து தமிழக அரசின் போட்டித் தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி, காவலர் தேர்வுகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசாங்க வேலைக்குச் சென்று சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி