தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் அப்பாண்டராஜ் உடன் இருந்தார்.