கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லூரியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS தலைமையில், போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொண்டனர். தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி மனித சங்கிலி ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சபீனா பானு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா, கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.