கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் இவர் புதுச்சேரியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த போது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து சதீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை தனது ஊருக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டு உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து சிறுமி, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.