கடலூரை சேர்ந்த 17 வயது தொழிற்பயிற்சி நிலைய மாணவியும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடலூருக்கு வந்த சுரேந்திரன் சில்வர் பீச்சுக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அதை புகைப்படம் எடுத்து அதை அவரது நண்பர் ராஜேஷ் குமாருக்கு அனுப்பியுள்ளார். அவர் அந்த புகைப்படத்தை மாணவியின் தாய்க்கு அனுப்பியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இது பற்றி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுரேந்திரன், ராஜேஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.