கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கடலூர் மாவட்ட தமிழர் பண்பாட்டு சேவல் கலை பாதுகாப்போர் சங்கம் இணைந்து நடத்தும் தென்னிந்திய அளவிலான முதலாம் ஆண்டு வெற்றுக்கால் சேவல் கலை சமர்திறன் போட்டி மார்ச் 22 மற்றும் 23ஆம் தேதி, கடலூர் அடுத்த எம். புதூரில் காலை 7 மணி முதல் மாலை 5. 30 மணி வரை நடைபெற உள்ளது. போட்டியை திமுக மாவட்ட பொருளாளர் ஏம். ஆர். கே. பி கதிரவன் துவக்கி வைக்க உள்ளார்.